இன்று, கடன்களை நீக்கி சுபிட்சம் தரும் சுக்கிரவாரப் பிரதோஷம்…

 

இன்று, கடன்களை நீக்கி சுபிட்சம் தரும் சுக்கிரவாரப் பிரதோஷம்…

வெள்ளிக்கிழமையை சுக்ரவார் என்று சொல்வார்கள். சுக்கிரனுக்கு உகந்த நாள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படுகிற வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.  அதனால், இன்று மாலையில் அருகில் இருக்கிற ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும், நந்தி தேவரையும் தரிசனம் செய்தால்

வெள்ளிக்கிழமையை சுக்ரவார் என்று சொல்வார்கள். சுக்கிரனுக்கு உகந்த நாள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படுகிற வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.  அதனால், இன்று மாலையில் அருகில் இருக்கிற ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும், நந்தி தேவரையும் தரிசனம் செய்தால், உங்கள் கடன் தொல்லைகள் எல்லாம் தீரும்.

god

கவலைகள் எல்லாம் பறந்தோடும் என்பது உறுதி. பொதுவாக, சிவன் கோயிலுக்குச் சென்றால், சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம். 
ஆனால் இன்றைய நாள், நந்தி தேவருக்கான நாள். இன்று ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை தான். அதனால், இந்த சுக்கிரவாரப் பிரதோஷ தினத்தில் நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணார தரிசித்து, மனதார பிரார்த்தனைச் செய்து பலனடையுங்கள். 

god

மாலை 6 மணிக்குள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அப்படி தரிசனத்திற்குச் செல்லும் பொழுது, மறக்காமல் நந்திதேவருக்கு வில்வமும், அரளியும் வாங்கிச் சென்று சார்த்துங்கள். அருகம்புல் மாலை கொடுத்து வணங்கி வழிபட்டாலும் சிறப்பு. இன்று பிரதோஷ வேளையில் சிவனையும், நந்தியையும் நிச்சயம் பலன்களைத் தரும்.