இன்று ஒரே ராசியில் இணையும் 6 கிரகங்கள்…மக்களுக்கு ஆபத்து என ஜோதிடர்கள் கருத்து!

 

இன்று ஒரே ராசியில் இணையும் 6 கிரகங்கள்…மக்களுக்கு ஆபத்து என ஜோதிடர்கள் கருத்து!

இதனால் 12 ராசிகளுக்கும் ஏற்பட போகும் மாற்றம் குறித்தும் அவர்கள் பலன்களை வெளியிட்டுள்ளனர். 

ஜோதிடத்தின்படி சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் (27-ந் தேதி வரை)  ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெற இருப்பது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் ஏற்பட போகும் மாற்றம் குறித்தும் அவர்கள் பலன்களை வெளியிட்டுள்ளனர். 

ttn

ஆனால்  இதை  விஞ்ஞானிகள்  ஏற்க மறுத்துள்ளனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் சவுந்தரராஜன்,  இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கோள்கள் சூரியனை  தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. அதேபோல் கோள்கள் இணைவதும் இயல்பான ஒன்று. இதனால் பூமியில் மாற்றம்  ஏதும் ஏற்படாது’ என்றார். 

ttn

 கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகரராசியில் ஒன்று சேர்ந்தன. அப்போதும் உலகம் அழிந்துவிடுமென ஜோதிடர்கள் கருத்து கூறினர். இதனால் நடிகைகள் பானுமதி வீட்டில் யாகம், அஞ்சலி தேவி திருப்பதியில் தரிசனம் என பரபரப்பாக சென்றுள்ளது. தியேட்டரில் கூட்டம் இல்லை, சாலைகளில் ஆள்நடமாட்டம் இல்லை. யாரும் வெளியில் வரவேண்டாம் என ஊடகங்களில் கூட செய்தி வெளியாகியதாம். இதுகுறித்து மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, செய்கைகளால், நம் எதிர்காலத்தை ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். எட்டு கிரகம் சேருவது பற்றி பயப்படாதீர்கள். கிரகங்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். நம் தலை எழுத்தை இந்த கிரகங்கள் எழுதவில்லை. என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.