இன்று ஒரு நாள் மாலை வரை கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை

 

இன்று ஒரு நாள் மாலை வரை கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஐந்து மாநகராட்சிப் பகுதிகளில் மூன்று நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிகளில் இன்று ஒரு நாளைக்கு மட்டும் மாலை வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து மாநகராட்சிப் பகுதிகளில் மூன்று நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதிகளில் இன்று ஒரு நாளைக்கு மட்டும் மாலை வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

grocery-shop-89

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பல இடங்களில் 26.4.2020 தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது. இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்!”