இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதியா? மோடியை கிண்டலடித்த டெரிக் ஓ பிரைன்.

 

இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதியா? மோடியை கிண்டலடித்த டெரிக் ஓ பிரைன்.

திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவரான டெரிக் ஓ பிரைன் ஒரு முழு நீள லொள்ளுப் பார்ட்டி.பிஜேபி தலைவர்களில் இவரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாதவர்ளே கிடையாது.

திரிணமுல் காங்கிரசின் மூத்த தலைவரான டெரிக் ஓ பிரைன் ஒரு முழு நீள லொள்ளுப் பார்ட்டி.பிஜேபி தலைவர்களில் இவரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாதவர்ளே கிடையாது.

derrick

பி.எம்.ஓ என்கிற பிரதமரின் செயலகம் தனக்கென தனியான டிவிட்டர் கணக்கு வைத்திருக்கிறது. அந்த டிவிட்டர் பக்கத்தில் ” நாம் அனைவரும்,ஒரே குடும்ப உறுப்பினர்கள். இதுதான் இந்தியாவின் பண்பாடு. ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியாகவும்,ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சப்கா சாத்,சப்கா விகாஸ்!.சப்கா விஸ்வாஸ் வழிகாட்டுதலின்படி நாங்கள் ஒவ்வொரு இந்தியனின் நலனுக்காக பணியாற்றுகிறோம்” என்று ஒரு பதிவை வெளியிட்டது.

இந்தப்பதிவு டெரிக் ஒ பிரைனின் கண்ணில் பட்டுவிட்டது.அவர் இதை கேலி செய்து வெளியிட்டிருக்கும் பதிவில் “இன்று ஏப்ரல் முதல் தேதி இல்லையே,அந்த நாளைத்தான் , முட்டாள்கள் தினம் என்று சொல்வார்கள்” என்று தாக்கி இருக்கிறார்.

இந்தப் பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.