இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்ககளிடம் உரையாற்றுகிறார்….. கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக பேசுவார்

 

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்ககளிடம் உரையாற்றுகிறார்….. கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக பேசுவார்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது கொரோனா வைரஸ் மற்றும் அதற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவார் என டிவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் கொலை வெறி ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. கொரோன வைரஸால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்

நம் நாட்டில் இதுவரை கொரோனா வைரசுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். 151 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

மருத்துவ பரிசோதனை

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலக டிவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் பிரச்சினை மற்றும் அதனை எதிர்த்து மேற்கொண்டு வரும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவர் நாட்டு மக்களிடம் விரிவாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.