இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் உரை!

 

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் உரை!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்  இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் மட்டும் மக்கள் ஊரடங்கை மேலும் பல மணி நேரங்கள் நீடித்தன. மக்கள் ஊரடங்கு முடிவடைவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக நேற்று பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தற்காக பொதுமக்களை பாராட்டினார். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள் என நேற்று ட்விட்டரில் அறிவுரை வழங்கினார்.

 

 

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில்  இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி.