இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா!  எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு!!

 

இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா!  எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  

கொரோனா வைரஸ்

அதாவது சென்னையில் 235பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 128பேருக்கும் திண்டுக்கல்லில் 69பேருக்கும் திருநெல்வேலியில் 60பேருக்கும், ஈரோட்டில் 70, திருச்சியில் 46பேருக்கும்,நாமக்கல் 50 மற்றும் ராணிப்பேட்டை 38, செங்கல்பட்டு 50, மதுரை 44,கரூர் 42, தேனி 43, மற்றும் திருவள்ளூரில் 46 பேருக்கு, தூத்துக்குடியில் 26, விழுப்புரத்தில் 26 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

LIST

இதேபோல் திருப்பூரில் 108, கடலூர் 20, மற்றும் சேலத்தில் 24, திருவாரூரில் 21, விருதுநகர் 17, திருவண்ணாமலை 12, தஞ்சாவூர் 36, நாகப்பட்டினம் 40, திருப்பத்தூர் 17, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும், சிவகங்கை 11மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 18, கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் 10 பேருக்கும், அரியலூர் 2 மற்றும் பெரம்பலூரில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.