இன்றும் ஆஜராகவில்லை விஜயபாஸ்கர்

 

இன்றும் ஆஜராகவில்லை விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகவில்லை.

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

அந்த வகையில்  விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்  கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் என ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி விஜயபாஸ்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றும் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.