இன்றுடன் முடிவடைகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் !

 

இன்றுடன் முடிவடைகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் !

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் கடந்த 6 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது.

தமிழகத்தில் 15 ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் கடந்த 6 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து,  சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்தலாம் என்பது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் 10 நாட்கள் நடத்தப்படும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், 9 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ttn

கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்றும் அந்த விவாதம் தொடர்ந்தது. விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினின் கேள்விகளுக்கு முதல்வர் இன்று பதில் அளிப்பார். அதன் பின்னர், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்கள் சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.