இன்னொரு கோத்ரா சம்பவம் நடக்கும்! கர்நாடக அமைச்சர் கொலை மிரட்டல்!
கோத்ரா சம்பவம் இந்திய வரலாற்றில் மறையாத களங்கம்.2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலத்தின் கோத்ரா நகரில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கலகக் கும்பல் தீவைத்தது.அதில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
கோத்ரா சம்பவம் இந்திய வரலாற்றில் மறையாத களங்கம்.2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலத்தின் கோத்ரா நகரில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கலகக் கும்பல் தீவைத்தது.அதில் 14 குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற கலவரத்தில் 60 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக பத்திரிகைகள் எழுதின.அண்மையில் மங்களூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் யு.டி காதர்,குடியுரிமைச் சட்டத்தை கர்நாடகாவில் அமல் படுத்தினால் கர்நாடக மாநிலமும் பற்றி எறியும் என்று பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி ரவி கொஞ்சம் ஓவராகப்போய் ‘ கோத்ரா சம்பவத்தை எம்.எல்.ஏ காதர் மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை காதர் நினைத்துப் பார்க்க வேண்டும்.ஒருவேளை மறந்திருந்தால் அதை நினைவுக்கு கொண்டு வர காதர் முயற்சிக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் பொறுமையை சோதித்தால் இன்னொரு கோத்ரா சம்பவம் நடக்கலாம் ‘. என்று பேசி இருக்கிறார்.
இதன் மூலம் சிறுபான்மையினருக்கு அமைச்சர் நேரடியாக கொலை மிரட்டல் விட்டிருப்பதாக அமைச்சர் ரவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.