இன்னும் 7 நாட்களில் முடிவு… சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..?

 

இன்னும் 7 நாட்களில் முடிவு… சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா..?

கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும். இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து இன்னும் 75 நாட்களில் வெளியே வருவார் எனக் கூறப்படுகிறது.  சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ-2 வாக 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்ற இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.  ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.சசிகலா

அதன்படி சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த இருக்கிறார். இதன் மூலம் அவரது தண்டனை 4 ஆண்டு என்பது உறுதியாகும். அந்த அபராதத்தை கொடுக்கவில்லை என்றால், சசிகலா கூடுதல் நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க  வேண்டும். இதனால் விரைவில் சசிகலா இந்த அபராதத்தை செலுத்த உள்ளார். ஏற்கனவே 1200 கோடி ரூபாய் சொத்துள்ளதால் பத்து கோடி என்பதெல்லாம் அவருக்கு பாக்கெட் மணியை போல. 

ஆனால், டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்து இருக்கும் 2 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதும் முக்கியம். இந்த புகார் சசிகலாவின் நன்னடத்தையை பாதிக்கும் என்பதால், அதில் இருந்து எப்படியாவது வெளியே வர சசிகலா திட்டமிட்டுள்ளார். ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று டி.டி.வி. தினகரன் தரப்பு நம்புகிறது.

சசிகலா

இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5-6 மாதத்தில் வெளியே வருவார் என்கிறார்கள். அதாவது, வரும் நவம்பர் மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பிக்பாக்கெட், செயின்  பறித்தவர்கள் உட்பட 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள்.

ரூபா

கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் இந்த விடுதலை நடக்கும். இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலில் ஏற்கனவே சசிகலா பெயர் இடம்பெற்றுள்ளது.

இதை காரணமாக வைத்துத்தான், சசிகலாவை மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் என்ன ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே நடக்கும். அந்த சான்றிதழும் இந்த மாத இறுதியில்  வழங்கப்படும். பெரும்பாலும் தேர்தல் முடிவை பொறுத்து சசிகலா நன்னடத்தை சான்றிதழ் பெறுவதில் முடிவு அமையலாம் என்கிறார்கள்.சசிகலா

டிஐஜி ரூபா ஒரு பாஜக ஆதரவாளர். இவர் வேண்டும் என்றே சசிகலாவை வெளியே விட்டு திரும்ப உள்ளே விட்டு சிசிடிவி கமெரா வீடியோ வெளியிட்டார். சத்யநாராயணாவையும் சிக்க வைத்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. திரும்ப பாஜக ஆட்சி நடந்தால் வேறுநாட்டு பிரச்னையைக் கூட சசிகலா தலையில் போட்டுவிட்டு ஆண்டுக் கணக்கில் உள்ளே தள்ளுவார்கள். ஆக மொத்தத்தில் ரிசல்டு வரும் 23ம் தேதி அதாவது இன்னும் 7 நாட்களில் சசிகலா விடுதலையாகும் முடிவு தெரிந்து விடும்.