இன்னும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுகிறதா அத்திவரதர் தரிசனம்?

 

இன்னும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுகிறதா அத்திவரதர் தரிசனம்?

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 48 நாட்கள் நீட்டிக்கப்படுகிறதா அத்திவரதர் தரிசனம்?

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். 40 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 1ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை ஆகஸ்ட் 17ல் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது.

முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானவர்கள் இன்னும் அத்திவரதரை தரிசிக்காத காரணத்தால் தரிசன உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கினால் அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா என்பது வழக்கு விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.