இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.. தைரியமாக இருங்கள்! – வைரமுத்து ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள்

 

இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.. தைரியமாக இருங்கள்! – வைரமுத்து ஜாதகத்தை அலசிய ஜோதிடர்கள்

வைரமுத்துவின் ஜாதகப்படி அவர் இன்னும் பல சர்ச்சைகளில் சிக்க வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

சென்னை: வைரமுத்துவின் ஜாதகப்படி அவர் இன்னும் பல சர்ச்சைகளில் சிக்க வாய்ப்பிருப்பதாக ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆண்டாள் குறித்து ஆய்வுக்கட்டுரை ஒன்றை தினமணி இதழில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தார் கவிஞர் வைரமுத்து.

ஆண்டாள் குறித்த அவரின் கட்டுரையை முழுமையாக படிக்காமலேயே நித்யானந்தா சீடர்கள், ஆண்டாள் பக்தர்கள், இந்து அமைப்பினர், பாஜகவினர் என அனைவராலும் மிகக் கடுமையாக வசை பாடபட்டட்டிருந்தார் அவர். 

அதன்பின், சில மாதங்கள் அவரின் பெயர், பெரிய அளவில் வெளிவராமல் நிலையில், வைரமுத்துவிற்கு எதிரான அந்த நெருப்பை மீண்டும் பற்ற வைத்துள்ளார் பாடகி சின்மயி. தனது ட்விட்டர் பக்கத்தில், ‘MeToo’ என்ற ஹேஸ்டேக் மூலம் சில வருடங்களுக்கு முன் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக சின்மயி குறிப்பிட்டிருந்தார்.

அவ்வளவு தான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் மொய்க்கத் தொடங்கிவிட்டனர் நவ நாகரீக நெட்டிசன்கள். ஆண்டாள் விவகாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட அதே வசை சொற்கள் மீண்டும் அவர் மீது பாயத் தொடங்கி இருக்கிறது.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்துள்ள வைரமுத்துவிற்கு தற்போது ராகு திசை நடைபெற்று வருகிறது. அவரின் ஜெனன ஜாதகத்தில் ராகு பகவான் மகரத்தில் இருந்து திசை நடத்தி வருகிறார். 

கடக ராசிக்கு மகரத்தில் இருக்கும் ராகு அவ்வளவு நன்மைகளை தருவதில்லை, அதன் விளைவாகவே தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது திசை காலத்தில் மக்களுக்கு துன்பங்களை தருவதில் நிழல் கிரகமான ராகுவிற்கு அலாதி பிரியம். இதன் காரணமாகவே, வைரமுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டிருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த நிலை மாற, வருகின்ற மார்ச் மாதம் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சி வரை இன்னும் பல சர்ச்சைகளை கடக்க வைரமுத்து சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.