இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு : தனித்தேர்வர்களுக்காகத் தனி தேர்வு மையம் !

 

இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு : தனித்தேர்வர்களுக்காகத் தனி தேர்வு மையம் !

11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியானது

11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன் படி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 ஆம்  தேதி தொடங்கி வரையிலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹால்டிக்கெட்டும் கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

ttn

இந்நிலையில் பள்ளிகள் அல்லாது டுடோரியல் மையங்களில் பயின்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தனித்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுத உள்ளதால், அவர்களுக்காகத் தனி தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் தேர்வில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.