“இன்னும் கூட கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள்”: நடிகர் சிவகார்த்தி வேதனை!

 

“இன்னும் கூட கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள்”: நடிகர் சிவகார்த்தி வேதனை!

சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க  மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். 

ttn

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் சல்யூட். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அவசரம் என்றால் மட்டும் வெளியே வாருங்கள்.

இன்னும் கூட கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்தாலே அனைத்தையும் நாம் முறியடித்து விடலாம். நான் நம்புவது ஒன்றே ஒன்றுதான் உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’”என்று தெரிவித்துள்ளார்.