‘இன்னும் எவ்வளவு காலம் தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குறது’ : கே.என். நேரு பரபரப்பு பேச்சு; அதிர்ச்சியில் திமுக தலைமை!

 

‘இன்னும் எவ்வளவு காலம் தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குறது’ : கே.என். நேரு பரபரப்பு பேச்சு; அதிர்ச்சியில் திமுக தலைமை!

காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்  முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். 

திருச்சி: காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்  முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுடன்  திமுக கூட்டணி அமைத்தது. திமுக 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், மத்தியில் காங்கிரஸ் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது. இதனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அதன் மூலம் நாமும் பயன்பெறலாம் என்று நினைத்து வந்த திமுக தலைமையின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டது காங்கிரஸ்.

kn nehru

 இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அந்த வகையில் திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டார்.  அப்போது பேசிய அவர், காங்கிரஸுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது. அதனால் திமுக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில்  தனித்துப் போட்டியிட வேண்டும். இது குறித்து நான் தலைமையிடம் தெரிவிப்பேன்’ என்றார். திருச்சியில் முக்கிய புள்ளியாகவும், திமுகவில் முக்கிய நிர்வாகியாக உள்ள கே. என். நேருவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jayakumar

நேருவின் இந்த பேச்சு குறித்துப் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,   சிந்துபாத்தை போல யார் தோள் மீதாவது ஏறி சவாரி செய்வதே காங்கிரஸில் வழக்கம் என்று தன்னுடைய பாணியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.