இன்னுமா குழந்தைக்கு பேரு வைக்கல?! பிரசார கூட்டத்தில் காமெடி செய்த உதயநிதி

 

இன்னுமா குழந்தைக்கு பேரு வைக்கல?! பிரசார கூட்டத்தில் காமெடி செய்த உதயநிதி

தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பரப்புரை களத்தைச் சுவாரஸ்யமாக மாற்றி வருகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். 

திண்டுக்கல்: தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பரப்புரை களத்தைச் சுவாரஸ்யமாக மாற்றி வருகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். 

மக்களவை தேர்தல்; உதயநிதி பரப்புரை

udhay

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முக ஸ்டாலின் பிரசாரம் செய்வதும், அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்காக முதல்வர் எடப்பாடி களமிறங்கியதும் தேர்தல் பிரசாரத்தைக் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. இதனிடையே திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான, உதயநிதி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க உதயநிதி தொடர்ந்து தன்னையும்  தன் தந்தையையும் விமர்சித்து வருவதாகவும், அரசியலில் கத்துக்குட்டியான உதயநிதி தமிழக நலன் குறித்து என்னிடம் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்தார். 

இன்னுமா உனக்கு பெயர் வைக்கவில்லை

udhay

இந்நிலையில், திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் உதயநிதி திறந்த வேனில் நின்று கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது ஒரு ஒரு பெண் தன இரண்டு வயது குழந்தையைத் தூக்கி கொண்டு வந்து பெயர் வைக்குமாறு கேட்டார். குழந்தையைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின், “ஏம்மா,இன்னுமா உனக்கு பெயர் வைக்கவில்லை என கேட்டு சிரித்ததோடு,  பாப்பா உனது பெயர் என்ன என்று அந்த குழந்தையிடம் கேட்க அதற்கு குழந்தையோ, ”சோபிகா” என்று   கூறியது. இதை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

udhay

இதை கேட்டு சிரித்த உதயநிதி, குழந்தை பெயர் நல்லா தான் இருக்கு. வேற பேரு எதுக்கு. வெயில் அடிக்குது குழந்தையைத் தூக்கிட்டு ஓரமாக நில்லுங்கள் என்றார்.  பிரசார கூட்டங்களில் நகைச்சுவையாகப் பேசி வரும் உதயநிதியின் பேச்சை திமுக தொண்டர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் ரசித்து வருகின்றனர். 

இதையும் வாசிக்க: பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூர்: ஆர்ப்பரித்த கோலி!