இன்சூரன்ஸ் பாலிசிகளை அபராதமில்லாமல் புதுப்பிக்கலாம்!

 

இன்சூரன்ஸ் பாலிசிகளை அபராதமில்லாமல் புதுப்பிக்கலாம்!

உங்கள் குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு என்று நினைத்து பாலிசி எடுத்து வைத்திருப்பீர்கள். சில, பல பொருளாதார சிக்கல்களினால் அந்த பாலிசியைத் தொடர முடியாமல் போயிருக்கலாம். முதல் மாதம் அச்சுறுத்தும் அபராதத் தொகை, பின் நமது சோம்பலினாலும், மாத தவணையோ, வருஷ தவணையோ மிச்சமாகும் என்று நினைத்தோ பாலிசியைத் தொடராமல் விட்டிருப்போம்.

உங்கள் குடும்பத்தாரின் எதிர்காலத்திற்கு என்று நினைத்து பாலிசி எடுத்து வைத்திருப்பீர்கள். சில, பல பொருளாதார சிக்கல்களினால் அந்த பாலிசியைத் தொடர முடியாமல் போயிருக்கலாம். முதல் மாதம் அச்சுறுத்தும் அபராதத் தொகை, பின் நமது சோம்பலினாலும், மாத தவணையோ, வருஷ தவணையோ மிச்சமாகும் என்று நினைத்தோ பாலிசியைத் தொடராமல் விட்டிருப்போம். தற்போது, அப்படி கட்டாமல் விடுபட்டு, காலாவதியான பாலிசியை புதுப்பிக்க சிறப்பு முகாமை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. 

insurance policy

பாலிசி எடுத்தவர்களில் பலரும் இப்படி பாதியிலேயே கட்டாமல் விட்டு விடுகின்றனர். பாலிசியைத் தொடர்ந்து கட்டி வருவது நமக்கு பொருளாதார பாதுகாப்பு தருகிறது. எல்ஐசி  நிறுவனம் மட்டுமல்லாது, பல தனியார் காப்பீட்டு நிறுவனங்களுமே கூட இவ்வாறு பாலிசியை தொடர்ந்து கட்ட தவறியிருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் அபராதத்துடன் கட்டவும், காலாவதி ஆகியிருந்தால் அவற்றை புதுப்பிக்கவும் அனுமதிக்கின்றன. அதனால், உடனே உங்கள் அருகில் இருக்கும் காப்பீட்டு நிறுவனங்களை அணுகி எடுத்து வைத்திருக்கும் பாலிசிக்கு உயிர் கொடுங்கள்.

insurance renewal

தற்போது, காலாவதியான பாலிசிக்களை புதுப்பிக்க எல்ஐசி சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம்களில், உங்களது காலாவதியான பாலிசியின் பாக்கி பிரீமியம் தொகையை செலுத்தி உங்கள் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம்.