இன்ஃபார்மர்ஸ் என்று 2 மலைவாழ்மக்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்கள்!

 

இன்ஃபார்மர்ஸ் என்று 2 மலைவாழ்மக்களை சுட்டுக்கொன்ற நக்சலைட்கள்!

ஆந்திரா மலைக்கிராமங்களில் ஒன்றான வீரவரம் கிராமத்திற்கு இரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்த நக்சலைட்கள், பாஸ்கர் ராவ், சிட்டி பாபு என இருவரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீசுக்கு உளவு பார்க்கிறார்கள் என்ற சந்தேகத்தில் மலைவாழ் மக்கள் இரண்டு பேரை நக்சலைட்கள் படுகொலை செய்துள்ளனர். ஆந்திரா மலைக்கிராமங்களில் ஒன்றான வீரவரம் கிராமத்திற்கு இரவு நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்த நக்சலைட்கள், பாஸ்கர் ராவ், சிட்டி பாபு என இருவரை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்.

Warning Notice

“போலீஸுக்கு உளவு சொல்பவர்கள் உடனடியாக அவற்றை விட்டுவிட்டு, மன்னிப்புக்கோரவேண்டும், இருவரின் சாவுக்கு போலீஸே பொறுப்பேற்க வேண்டும்” என்ற துண்டு பிரசுரத்தையும் ஒட்டிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாபுஜி, ‘நக்சலைட்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதால் ஆத்திரத்தில் இப்படி வன்முறையில் ஈடுபடுவதாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்’ தெரிவித்தார்.