இனி வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம்!

 

இனி வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யலாம்!

வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை: வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

vote

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

satya

இந்நிலையில் இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்ய செல்போன் ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம்  இணையத்தில் ஆதாரத்துடன் வாக்காளரே திருத்தம் செய்யலாம். வரும் 1.9.2019 முதல் 30.9.2019 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும். மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளச் சிறப்பு முகாம் நடத்தப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.