இனி வருஷத்துக்கு 150 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாம்!

 

இனி வருஷத்துக்கு 150 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாம்!

2019ம் ஆண்டில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மீதமுள்ள 215 நாட்களிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுக்கலாம் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

சென்னை:  2019ம் ஆண்டில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மீதமுள்ள 215 நாட்களிலும், ஐந்து நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுக்கலாம் என தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஒன்று முதல் பிளஸ் 2 வரை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 210 நாட்கள் பணியாற்றினால் போதும். அதற்கு குறைவான நாட்கள் இருந்தால் சனிக்கிழமைகளில் பணியாற்ற வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் சனிக்கிழமையன்று பாதி நாள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வரும், 2019ம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறையாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரியில் 11 நாட்கள்,  பிப்ரவரியில் 7, மார்ச்சில் 9, ஏப்ரலில் 16, மே 31, ஜூன் 10, ஜூலை 7, ஆகஸ்ட் 11, செப்டம்பர் 14, அக்டோபர் 12, நவம்பர் 8, டிசம்பரில், 14 நாட்கள் என 150 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாள்களுக்கு ஏற்ப வகுப்புகளுக்கான பாட அட்டவணை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையின்படி மொத்தம் 365 நாள்களில் 215 நாள்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும்; ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். இதிலும் ஐந்து நாட்கள் உள்ளூர் பண்டிகை மற்றும் மழைக்கால விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ‘ஜாலி’யாக அமையும். 

ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் 47 நாள்கள், கோடை விடுமுறை கிடைக்கிறது. கோடை விடுமுறையில் பொது தேர்வுக்கான விடை திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தனியாக ஊதியம் தரப்படுகிறது.