இனி பேனர் வைக்க மாட்டோம்! நோ மீன்ஸ் நோ….மனம் திருந்திய அஜித் ரசிகர்கள்!

 

இனி பேனர் வைக்க மாட்டோம்! நோ மீன்ஸ் நோ….மனம் திருந்திய அஜித் ரசிகர்கள்!

தல அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்தவொரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் நோட்டிஸ் அடித்துள்ளனர். 

தல அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்தவொரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என மதுரை அஜித் ரசிகர்கள் நோட்டிஸ் அடித்துள்ளனர். 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவரும் ஜெயகோபாலின் மகள் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் தான் சுபஸ்ரீயின் மீது விழுந்து அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஜெயகோபால் மீது பள்ளிகரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

ajith

இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் சார்பில் மதுரை அஜித் ரசிகர்கள் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நோட்டீஸில் சாலைகளின் பேனர் கவிழ்ந்து சுபஸ்ரீ என்கின்ற சகோதரியின் இழப்பு மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்தி இருக்கின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளனர். அதில் தல அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்தவொரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுகின்றோம் எனவும் பதிவிடப்பட்டுள்ளது. இதனை அடித்தது மனித கடவுள் அஜித் பக்தர்கள் என்பது குறிப்பிடதக்கது.