இனி பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் புது திட்டம்!

 

இனி பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் புது திட்டம்!

எப்போதும் இல்லாத திருநாளாக சமீக காலங்களாய் திருவள்ளுவர் மீது தமிழக அரசியல்வாதிகளுக்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு விதவிதமான நிறங்களில் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில நிர்வாகி நிர்மல் குமார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்று ட்விட்டரில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். 

எப்போதும் இல்லாத திருநாளாக சமீக காலங்களாய் திருவள்ளுவர் மீது தமிழக அரசியல்வாதிகளுக்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு விதவிதமான நிறங்களில் ஆடைகளை அணிவித்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில நிர்வாகி நிர்மல் குமார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு, திருக்குறளை ஆவின் பால் பைகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்று ட்விட்டரில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். 

rajendra balaji

கோரிக்கை வைத்தது பாஜகவின் மாநில நிர்வாகி. உடனடியாக அவரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், ‘மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என்று அதற்கு பதிலளித்துள்ளார். ஆகையால் பெருமதிப்பிற்குரிய வாக்காள பெருமக்களே… இனி பால் பாக்கெட்டுகளில் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் போது திருக்குறளையும் படிச்சு வெச்சுக்கோங்க!