இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை!

 

இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை!

கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து தெலங்கானா அரசு  பாட்டிலில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கக்கூடாது என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவர் கொல்லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது.
 

ttn

இந்த சம்பவத்திற்குப் பிறகு பெட்ரோல் பங்குகளுக்கு PESO licence வழங்கும் அலுவலகத்திலிருந்து கிடைத்த செய்தியில், பெட் பாட்டிலில் பெட்ரோல் இனி கண்டிப்பாக வழங்கக்கூடாது என்று அறிவித்துள்ளது. அதன்படி, டீலர்கள் அனைவரும் இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று ஊழியர்களுக்குத் தெரிவிப்பதுடன், பெட் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று டைப் செய்து  பெட்ரோல் பங்கில் ஒட்டவேண்டும். இதை மீறி விற்பனை செய்தால்  அதற்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் பொறுப்பு ஏற்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.