இனி பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு ஒரே தாள்!
Sep 13, 2019, 20:45 IST1568387705000
பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மொழிப்பாடத்திற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மொழிப்பாடத்தில் தமிழ் தாள் 1, தமிழ் தாள் 2, ஆங்கிலம் தாள் 1, தாள் 2 என்ற வகையில் தேர்வுகள் நடைபெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்திற்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மொழித்தாள்களுக்கான ஒரே தேர்வு நடைமுறை நிகழ் கல்வி ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது