இனி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் – தமிழக அரசு
சென்னையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி, மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி, மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டு அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் பயண அட்டை விற்பனை மையங்களில் , மாதந்தோறும் 2 லட்சத்து 61 ஆயிரம் பேர் நேரடியாக பணம் செலுத்தி பயணச் சலுகை அட்டையினை பெறுவதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.
மேலும், தற்போது பொதுமக்கள் நலன் கருதியும், மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப்பிங் மெஷின் (swiping machine) வாயிலாக பணம் செலுத்தி பயண அட்டைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.