இனி இந்த தவறு நடக்காது: காத்திருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி!

 

இனி இந்த தவறு நடக்காது: காத்திருந்த ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி!

சீமராஜா திரைப்படம் ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடி இனி எந்த படத்துக்கும் நடக்காது என சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்

சென்னை: ‘சீமராஜா’ திரைப்படம் ரிலீஸில் ஏற்பட்ட குளறுபடி இனி எந்த நடக்காது என சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘சீமராஜா’ திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று வெளியானது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான இப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி கேடிஎம் லைசன்ஸ் பிரச்னை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

 ’சீமராஜா’ படத்தின் முதல் காட்சியை பார்க்க ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு 7 மணி காட்சி வெளியானது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பை காண நடிகர் சிவகார்த்திகேயனும், சூரியும் காசி திரையரங்கிற்கு வந்தனர்.

அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், சீமராஜாவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. முதல் காட்சி ரிலீசாகாததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தது வருத்தமளிக்கிறது. இனி எந்த படத்துக்கும் இந்த தவறு நடக்காது. படம் ரிலீஸுக்கு முன்பாகவே இதனை சரி பண்ணிடலாம் என தெரிவித்தார்.

மேலும், 6 பேக் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சூரி, இயக்குநர் மற்றும் ஹீரோ சொன்னாருன்னு செஞ்சேன். அதுக்கு எல்லா பக்கத்துல இருந்தும் நல்ல பாராட்டு கிடைச்சிருக்கு. கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கும் என சூரி தெரிவித்தார்.