“இனிமே மோசமா விளையாடாதீங்க!” – இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வுக்குழு தலைவர் எச்சரிக்கை

 

“இனிமே மோசமா விளையாடாதீங்க!” – இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வுக்குழு தலைவர் எச்சரிக்கை

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எம்.எஸ்.கே பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை: மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எம்.எஸ்.கே பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 என்ற கணக்கில் படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரில் 593 ரன்களைக் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே அவர் டக்அவுட் ஆனார். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இந்த தொடரில் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளிலும் இறங்க வேண்டும்.

இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரஹானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்க வேண்டும். போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில் உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேட வேண்டியது அவசியமானது” என்றார்.