“இனிமே அவகிட்ட பேசினா அவ்ளோதான் “காதலித்த வாலிபர் -கத்தியால் குத்திய உறவினர் –
ராஜேஷின் உறவுப்பெண்ணை காதலித்ததால் சுகுமாரை ராஜேஷ் செவ்வாயன்று கத்தியால் குத்தினார் .
உணவு விநியோகிக்கும் நபராக பணிபுரியும் சுகுமார், அந்த பகுதியிலுள்ள ஒரு பெண்னை காதலித்து வந்தார், இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராயப்பேட்டையில் உள்ள சைவா முத்தியா தெருவைச் சேர்ந்த கே.ராஜேஷ் (29) என்ற வாலிபரும் கே சுகுமார் (23) என்பவரும் அதே இடத்தைச் சேர்ந்தவர்கள் . ராஜேஷின் உறவுப்பெண்ணை காதலித்ததால் சுகுமாரை ராஜேஷ் செவ்வாயன்று கத்தியால் குத்தினார் .
உணவு விநியோகிக்கும் நபராக பணிபுரியும் சுகுமார், அந்த பகுதியிலுள்ள ஒரு பெண்னை காதலித்து வந்தார், இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் புதன்கிழமை சுகுமார் மற்றும் குடும்பத்தினரை அவரது வீட்டிற்கே சென்று கடுமையாக தாக்கினர். அவர்கள் தாக்கினாலும் சுகுமார் குடும்பத்தினர் போலீசை அணுகவில்லை
பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுகுமார் பணியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, வி.எம். ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகில் பெரியார் சிலை அருகே ஒரு கும்பல் சுகுமாரை தடுத்து நிறுத்தியது. அதில் சிலர் சுகுமாரை பிடித்துக்கொண்டிருக்க, ராஜேஷ் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு சுகுமாரின் நண்பர்களுக்கு தகவல் கிடைத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசுக்கு தகவல் கிடைத்து ராஜேஷை ராயப்பேட்டா போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர் .