இனிமேல் ஸ்டாலின் ஆட்சிக்கு வர மாட்டார்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்..

 

இனிமேல் ஸ்டாலின் ஆட்சிக்கு வர மாட்டார்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம்..

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்கு சேகரிக்கும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர்.

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்கு சேகரிக்கும் முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்துப் பல அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதய குமார் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

RP Udayakumar

பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆட்சி மாற்றம் என்ற பலாப்பழம் அவருக்குக் கிடைக்கும் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் என்றைக்குமே அந்த பலாப் பழம் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. இதுவரை ஸ்டாலின் 1000 முறை திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறிவிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் போட்டியிடத் திணறி வரும் ஸ்டாலின் எப்போதுமே ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை என்று விமர்சித்துள்ளார். 

MK Stalin