இந்த 13 பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை!

 

இந்த 13 பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை!

பயணிகளின் நலனை கருதி விமானத்தில் பொருட்கள் கொண்டுவரவும் கட்டுப்பாடு இருக்கும். 

துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில் பொருட்கள் கொண்டு செல்வதில் அந்நாட்டு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

விமான பயணத்தின் போது  பொதுவாகவே பயணிகள் கடுமையான  சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகளின் நலனை கருதி விமானத்தில் பொருட்கள் கொண்டுவரவும் கட்டுப்பாடு இருக்கும். 

ttn

துபாய் நாட்டிலிருந்து புறப்படும் விமானத்தில் பொருட்கள் கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில்,  ரசாயனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள், பெரிய அளவிலான உலோகங்கள், பவர் பேங்க், பேட்டரி, டார்ச் லைட், தீப்பற்றக்கூடிய பொருட்கள், அதிக அளவிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், மின் சிகரெட்டுகள் போன்ற 13 பொருட்களுக்குத் தடை விதித்துள்ளனர்.

காவல்துறையால் தடை செய்யப்பட்ட பொருட்களை  மக்கள் கொண்டுவரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.