இந்த 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…

 

இந்த 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்

சென்னையைப் பொறுத்தவரை வெறும் மேகமூட்டத்தை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும். அதே சமயம் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை.

சேலம், தர்மபுரி,ஈரோடு,நீலகிரி, கோவை, தேனி,திண்டுக்கல்,விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். அந்த சமயம் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு இல்லை. லேசான மேகமூட்டத்தை மட்டுமே காணமுடியும் என்று அறிவிக்கப்படுள்ளது.