இந்த மாதம் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

 

இந்த மாதம் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் கனா திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப்  புகழ் கார்த்திக்  இயக்கியுள்ள படத்தைத் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். சின்னதிரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

nnom

இதில் ரியோவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்துள்ளார். மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வரும் திங்கள்கிழமை வெளியாகும் என்று கூறியுள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனின் கனா படத்திற்கு கிடைத்த வெற்றி இப்படத்திற்கு கிடைக்குமா? என்று பொருத்துத்திருந்து தான் பார்க்க வேண்டும்.