இந்த மாதம் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் விலை உயருகிறது…… நிறுவனங்கள் சலுகைகள் எதுவும் அறிவிக்குமா?

 

இந்த மாதம் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் விலை உயருகிறது…… நிறுவனங்கள் சலுகைகள் எதுவும் அறிவிக்குமா?

இந்த மாதம் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி உள்பட பல வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்கள் விலை உயருகிறது. அதேசமயம் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்நிறுவனங்கள் ஏதாவது சலுகைகள் அறிவித்தால் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.

மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் பி.எஸ்.6 ரக என்ஜின் வாகன தயாரிப்பு மாறியதால் அதற்கான செலவினம் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகன தயாரிப்புக்கான அடக்க செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதம் விலையை உயர்த்த போவதாக கடந்த மாதமே அறிவித்தன.

வாகனங்கள்

அதன்படி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ், கியா மோட்டார்ஸ், நிசான் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாதம் முதல் விலையை உயர்த்துகின்றன. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் நிறுவனங்களும் விலை அதிகரிக்க உள்ளன.

மாருதி நிறுவன கார்

இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் விலை இந்த மாதம் உயர்த்த போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்நிறுவனம் தனது அனைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை ரூ.2,000 உயர்த்தும் என தெரிகிறது. ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏதாவது சலுகைகள் அறிவித்தால் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.