இந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ? ஏடிஎம்மில் பணம் இருக்காது! உஷார் மக்களே!

 

இந்த மாசம் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ? ஏடிஎம்மில் பணம் இருக்காது! உஷார் மக்களே!

பொதுதுறை வங்கிளான பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் பிற 10 வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.

bank strike

மத்திய அரசின் இந்த  முடிவைக் கண்டித்து, வருகிற 25-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை என 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்  தீபல் குமார் சர்மா தெரிவித்தார். 

இது தவிர, செப்டம்பர் 28-ஆம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால், வங்கிகளில் எந்த வேலையும் இருக்காது, அன்றைய தினமும் வங்கிகள் விடுமுறை. தொடர்ந்து செப்டம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கும். எனவே செப்டம்பர் 26 துவங்கி 29-ஆம் தேதி வரை என நான்கு நாட்கள் வங்கிகள் வேலை தடைபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

atm not working

ஏற்கெனவே நம்ம ஊர்ல இருக்கிற பாதி ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யறதில்லை. அப்படியே வேலை செய்தாலும், நாலு தடவைக்கு மேல நம்ம பணத்தை நாம எடுத்தாலே அதுக்கும் கட்டணம் வசூலிக்கறாங்க. வங்கிகளின் இந்த தொடர் விடுமுறையினால், ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் இருக்காது என்பதால், முன்கூட்டியே திட்டமிட்டு உங்களோட தேவைக்கு ஏற்ப பண விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க! உங்கள் வங்கி தொடர்பான பணிகள் நிலுவையில் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட இந்த நாட்களுக்கு முன்னதாக வங்கி பணிகளை முடித்து விடுவது நல்லது.