‘இந்த படத்தைப் போடக்கூடாது’…திரௌபதி படத்தை வெளியிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு : 14 பேர் கைது!

 

‘இந்த படத்தைப் போடக்கூடாது’…திரௌபதி படத்தை வெளியிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு : 14 பேர் கைது!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை ஷீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி, நடிகை ஷீலா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”.இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் கருணாஸ்,ஜீவா ரவி,  பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாடகக் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ttn

அதிலிருந்து இந்த படத்திற்குப் பலர் ஆதரவுகளும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு பா.ம.க தலைவர் ராமதாஸும் அவரது கட்சியினரும் பெரும் ஆதரவு தெரிவித்தனர். பல சர்ச்சைகளுடன் உருவாகியுள்ள இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி என்னும் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டது.

ttn

இதனை வரவேற்கும் விதமாக பா.ம.கவினர் தியேட்டரை சுற்றி போஸ்டர் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டர்களை  அகற்ற வேண்டும் என்று கூறி சுற்று வட்டார பகுதி மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், திரௌபதி படத்தை தியேட்டரில் போடக் கூடாது என்றும் கூறி தியேட்டர் மீது கல்லை விட்டு எறிந்தனர்.

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், பொம்மிடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 14 பேரை கைது செய்து ஜாதி மோதல்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.