இந்த தேர்தலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும்: விஜயகாந்த் மகன் சூளுரை!

 

இந்த தேர்தலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும்: விஜயகாந்த் மகன் சூளுரை!

தேமுதிகவின் தேர்தல் தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளிவர உள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்: தே.மு.தி.க. வின் தேர்தல் தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளிவர உள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது. அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்கவுள்ளது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இன்னமும் இழுபறி நீடித்து வரும் நிலையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. 

இந்நிலையில்  பெரம்பலூர் அருகேயுள்ள எழுமூர் கிராமத்தில் விஜய பிரபாகரன் தே.மு.தி.க கொடியை ஏற்றினார்.அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ‘தே.மு.தி.க.வின் சார்பில் இன்று மாலை தேர்தல் தொடர்பான அறிக்கை வரவுள்ளது. விஜயகாந்த் காட்டும் வழியில் செயல்பட்டு இந்த தேர்தலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். வரும் 2021 தேர்தலில் நம்முடைய நோக்கம் வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும்’என்றார்.

சென்னை போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இன்று மாலை ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.