இந்த ஞானம் அப்போ எங்க போச்சு? திமுகவை விளாசும் கார்த்தி சிதம்பரம்

 

இந்த ஞானம் அப்போ எங்க போச்சு? திமுகவை விளாசும் கார்த்தி சிதம்பரம்

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் கடந்த சில நாட்களாகவே விவாதப்பொருளாக இருந்துவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் திமுக தேர்தல் தர்மத்தை மீறிவிட்டதாகவும், இடஒதுக்கீடு தரவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டனர். 

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் கடந்த சில நாட்களாகவே விவாதப்பொருளாக இருந்துவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் திமுக தேர்தல் தர்மத்தை மீறிவிட்டதாகவும், இடஒதுக்கீடு தரவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டனர். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக வேலூரில் பேட்டியளித்த துரைமுருகன், “கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றால் எங்களுக்குக் கவலையில்லை. அதனால், எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு ஓட்டு கிடையாது. அவர்கள் விலகுவதைப் பற்றி கவலைப்படவில்லை. எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை” என தெரிவித்தார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டரில், “வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை?” என துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்