இந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்!

 

இந்த காரணத்தினால் தான் சாண்டி என்னை பிரிந்தார்: பிக் பாஸ் காஜல் ஓபன் ஸ்டேட்மென்ட்!

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாண்டியிடம் எப்படி  காதல் முறிவு ஏற்பட்டது என்பது குறித்து காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.

 சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாண்டியிடம் எப்படி காதல் முறிவு ஏற்பட்டது என்பது குறித்து காஜல் பசுபதி கூறியுள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிரப்படுகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த இதில் பொறாமை, ஈகோ, கோவம் போன்றவை ஜாஸ்தியாக இருக்கும் என்றே எதிர்பாக்கப்டுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு சீசன்களையும் ட்ரோல் செய்த  சாண்டி போட்டியாளராகக் களமிறங்கியுள்ளார். 

அவர் போட்டியாளராகக் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் காஜல் பதிவு ஒன்றை பகிர்ந்தார். இவர் சாண்டியின் முதல் மனைவி ஆவர். அவர் பதிவிட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ ‘என்ன டான், முதல் காதலா, முதல் காதல் தான் எப்பொழுதுமே ஸ்பெஷலானது’ என்று கமெண்ட் செய்தனர். 

kajal

அதற்கு பதிலளித்த காஜலோ, ‘அய்யோ அவர் முதல் காதல் இல்லையே… கடைசி காதல்.. நான் அட்டக்கத்தி தினேஷ் மாதிரி’ என்று பதில் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து மற்றொருவர் ‘கடைசி காதல் என்கிறீர்கள், அப்போ ஏன் பிரேக்கப்’ என்று கேட்க, ‘பிரேக்கப்பா.. அது பெரிய கதை… நம்ம லவ் டார்ச்சர் தான்… வல்லவன் ரீமாசென் மாதிரி பண்ணா யார் தாங்குவா’ என்று நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார்.