இந்த உலகத்துல தாயைவிட பெரிய சக்தி எதுவும் இல்லை! மிரள வைத்த உண்மை சம்பவம்!!
மிசோரத்தில் வாலி பால் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இடையில் தனது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அதிர்ஷடம் அடித்துளது.
மிசோரத்தில் வாலி பால் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இடையில் தனது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அதிர்ஷடம் அடித்துளது.
மிசோரத்தை சேர்ந்த லால்வெண்ட்லுங்கி (Lalventluangi) துய்க்கும் வாலி பால் குழுவை(Tuikum Volleyball Team) சேர்ந்தவர். இவர் தனது 7மாத குழந்தையுடன் விளையாடுவதற்காக மைதானம் வந்தார். விளையாட்டின்போது அவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு பாலூட்டினார். விளையாட்டுக்கு நடுவே கடமை தவறாது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த செய்தி அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவிய ரொய்டேவின் பார்வைக்கு செல்லவே, லால்வெண்ட்லுங்கியின் கடமை உணர்வை பாராட்டி 10 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். மேலும் வீராங்கனை என்ற கர்வமில்லாது ஒரு தாயாக தனது கடமையை செய்த அந்த பெண்ணுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லால்வெண்ட்லுங்கியின் அர்ப்பணிப்பும் தைரியமும், ஒரு பெண்ணின் இரட்டை பொறுப்புகளையும் தாய்மையையும் கண்முன் நிறுத்துகிறது.