இந்த ஆண்டு முழுவதும் வீட்லிருந்தே பணியாற்றுங்கள்… பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள்

 

இந்த ஆண்டு முழுவதும் வீட்லிருந்தே பணியாற்றுங்கள்… பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள்

பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பல்வேறு நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்று வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதி முதல் தங்களது அலுவலகங்கள் திறக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. எனினும் விருப்பமுள்ள ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிவரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

work from home

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக பேஸ்புக் நிறுவனம் மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது. இதனிடையே கூகுள் நிறுவனம் ஊழியர்கள் ஜூலை மாதம் முதல் பணிக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தே பணி செய்யலாம் என கூறியுள்ளது.