இந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு – வைரமுத்து
Jan 16, 2020, 11:54 IST1579155876000
தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம், இந்த ஆண்டின் தேவை மதுவிலக்குதான் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பெசண்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “தமிழ்நாட்டை மாசுபடுத்தும் நஞ்சு என்று மதுவை சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவை சுத்தமாக முடித்துவிடலாம்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு தான் இந்த நிமிஷத்தில் தேவை, இந்த ஆண்டின் தேவை, இந்த காலத்தின் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், மதுவிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டால் தீமையிலிருந்து தமிழர்கள் மீண்டு வருவார்கள்” என தெரிவித்தார்.