இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : 188 பேர் பயணம் செய்ததாக தகவல்!

 

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் : 188 பேர் பயணம் செய்ததாக தகவல்!

ஜகார்தாவில் இருந்து இன்று காலை பங்க்கால் பினாங் தீவுகள் சென்ற விமானம் 13 நிமிடத்தில் மாயமான நிலையில், அது கடலில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜகார்தா: ஜகார்தாவில் இருந்து இன்று காலை பங்க்கால் பினாங் தீவுகள் சென்ற விமானம் 13 நிமிடத்தில் மாயமான நிலையில், அது கடலில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்குப் புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம்,  புறப்பட்ட 13வது நிமிடத்திலேயே   விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தைத் தேடி வருகிறோம் என்று இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

பின்னர் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளன. அந்த விமானத்தில் விமான ஊழியர்கள், பயணிகள் என 188 பேர் பயணித்துள்ளதாக இந்தோனேஷிய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விமானமானது  லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.