இந்தோனேசியாவில் மழை, வெள்ளம்: பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

 

இந்தோனேசியாவில் மழை, வெள்ளம்: பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

இந்தோனேசியா பபுவா பகுதியில் பலத்தமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியா: இந்தோனேசியா பபுவா பகுதியில் பலத்தமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

ttn

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பலத்த பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல  வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  21 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர்  வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ttn

தற்போது அப்பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது.  இருப்பினும், மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும்  பணிகளை,  அதிகாரிகள் துரிதமாகச் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.