இந்தோனேசியாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பேர் உடல் நசுங்கி பலி

 

இந்தோனேசியாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 பேர் உடல் நசுங்கி பலி

இந்தோனேசியாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா டாங்குபன் பெராகு எரிமலை அமைந்துள்ளது. அதை காண்பதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் 58 சுற்றுலா பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்தது. சுபாங் மாவட்டத்தில் உள்ள பலாசாரி சாலையின் வளைவான பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் எட்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.