இந்து வழிபாட்டு முறையை கொச்சை படுத்தி பேசியதாக விஜய் சேதுபதி மீது புகார்!

 

இந்து வழிபாட்டு முறையை கொச்சை படுத்தி பேசியதாக விஜய் சேதுபதி மீது புகார்!

இந்து மகா சபா சார்பில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்னும் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ஒரு சிறுமி தாத்தாவிடம் இந்து கோவில்களில் சாமி குளிப்பதை காட்டுபவர்கள், ஏன் உடை மாற்றுவதை காட்ட மறுக்கிறார்கள் என்று கேட்பதாக கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி பேசியது, இந்து வழிபாட்டு முறைகளை கொச்சை படுத்தி பேசும் விதமாக இருப்பதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்து மகா சபா சார்பில் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ttn

அந்த புகாரில், நிகழ்ச்சியின் நோக்கம் குறைந்த தண்ணீரில் எப்படி குடிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டிருக்கும் போது, அவர் இந்துக் கோவில்களின் அபிஷேக முறையைப் பற்றி எதற்காக பேச வேண்டும் என்றும் விஜய் சேதுபதி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.