இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு!

 

இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கோவையில் பரபரப்பு!

வாசலில் இன்று காலை உடைந்த பாட்டில்கள் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

கோவை கோணார் வீதியில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகத்தின் வாசலில் இன்று காலை உடைந்த பாட்டில்கள் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு மர்ம நபர்கள் வெடி குண்டு வீசிவிட்டுச் சென்றிருக்கலாமோ என்று சந்தேகிக்கப் படுகிறது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

ttn

மேலும் அங்குக் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப் பட்டுள்ளது. போலீசாரின் சோதனையில் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அலுவலகத்திற்கு முன்னால் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து இங்கும் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.