இந்து தலைவர்களை கொல்ல சதி; என்ஐஏ அதிரடி சோதனை

 

இந்து தலைவர்களை கொல்ல சதி; என்ஐஏ அதிரடி சோதனை

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதி செய்தவர்களின் வீடுகளின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தினர்.

கோவை: இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய சதி செய்தவர்களின் வீடுகளின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தினர்.

இந்து இயக்கங்களின் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆசிக், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 7 பேரும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தேசிய சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்து இயக்கங்களின் தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கைதானவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) இன்று சோதனை நடத்தினர். உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள பைசல், சந்திரன் வீதியில் உள்ள ஆசிக் மற்றும்  அன்வர் ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.