இந்து கடவுள்கள் பற்றி அவதூறு பேச்சு: கிறிஸ்துவ போதகர் மீது குவியும் புகார்கள்

 

இந்து கடவுள்கள் பற்றி அவதூறு பேச்சு: கிறிஸ்துவ போதகர் மீது குவியும் புகார்கள்

இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார்கள் குவிந்து வருகிறது.

சென்னை: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார்கள் குவிந்து வருகிறது. 
 
தூத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், இந்துகடவுள்களை சாத்தான் என்றும், இந்து கோவில்களை சாத்தான்களின் அரண்கள் எனவும் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
 
இந்நிலையில், இதுதொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி, கோவை- கருமத்தம்பட்டி மற்றும் சூலுார் காவல் நிலையங்களில் மோகன் லாசர்ஸ் மீது புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மோகன் லாசரஸ் தமிழக பள்ளி, கல்லூரிகளில் மதமாற்றம் செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.