இந்துக்களை அவமதித்தால் அரசியல் தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? தமிழிசை கேள்வி

 

இந்துக்களை அவமதித்தால் அரசியல் தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? தமிழிசை கேள்வி

இந்துக்களை அவமதிப்பது போல் ஓவிய கண்காட்சி வைத்த லயோலா கல்லூரியை ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: இந்துக்களை அவமதிப்பது போல் ஓவிய கண்காட்சி வைத்த லயோலா கல்லூரியை ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தையும், பெண்களையும் அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடும் எதிர்ப்பு எழுந்ததால் லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆனாலும், இந்தக் கண்காட்சியின் பின்னணியை காவல் துறையினர் கண்டறிய வேண்டும். மதக் கலவரத்தை  தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

இதுபோல வேறு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என அனைத்துத் தலைவர்களும் கொதிந்தெழுந்து கண்டன அறிக்கை விட்டிருப்பார்கள். ஆனால், இந்துக்களை அவமதிக்கும் கண்காட்சியை கண்டிக்கக்கூட அவர்களால் முடியவில்லை. எல்லா விதத்திலும் அவர்கள் இரட்டை அளவுகோல்களை பின்பற்றுகின்றனர். இனியும் இதை மக்கள் பொறுக்கமாட் டார்கள் என்றார்.